Author: Chamali Perera

பேராசிரியர் சாம் கருணாரத்ன

பேராசிரியர் சாம் கருணாரத்ன அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்தார் - அதாவது 1960 களில் - இலங்கையில் கணினிமயமாக்கல் தொடங்கியது, அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது. 1960 களின் பிற்பகுதியில் அரசாங்கம் ஒரு கணினியை அரசு துறை நிறுவனத்திற்கு ஒதுக்க முடிவு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். ​ கட்டிட துறை பொறியியலாளரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் (SEC) ஸ்தாபக தலைவருமான கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க, தனக்கு கணினியொன்றின் தேவை மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக, ஒரு கணினியை வாங்குவதற்கு SEC இனால் 2 மில்லியன் ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகையொன்றை ஒதுக்கப்பட்டது. அப்போது...
மேலும் வாசிக்க

திரு. கோலித தர்மவர்தன

திரு. தர்மவர்தன அவர்கள் 1986 ஆம் ஆண்டில் தகவல் தொழிநுட்பப் பேரவையில் (CINTEC) சட்டமும் கணினிகளுக்குமான குழுவில் உறுப்பினராவார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலங்கை தகவல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் முன்னோடியான தகவல் தொழிநுட்பவியல் பேரவையினால் (CINTEC) "கணினிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நாட்டின் நீதித் துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வழிமுறைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றை சட்டமயப்படுத்துவதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.........” என்பவற்றுக்காக சட்டமும், கணினிகளுக்குமான குழு தாபிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாவனையின் ஊடாக...
மேலும் வாசிக்க

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ அவர்கள் தனது பாடசாலை கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானமானி (கௌரவ) பட்டத்தையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் மில்லேனியம் ஐ.டி (MIT) நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி / நிறைவேற்று பணிப்பாளராகவும் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் ​மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை தலைவராகவும்,  பணியாற்றியுள்ளார். MIT யில் பணிபுரியும்போது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அவர் காட்டிய ஈடுபாடானது தகவல் தொடர்பாடல் தொழில்நு...
மேலும் வாசிக்க

கலாநிதி ரானி ஜெயமஹா

கலாநிதி ரானி ஜெயமஹா இற்கு 1970 ஆம் ஆண்டில் பேராதனையில் அமைந்திருந்த அப்போதைய சிலோன் பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கியியல் இல் முதல் பட்டம், பி.ஏ(Hons) வழங்கப்பட்டது. சிலோன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராக ஒரு வருடம் பணியாற்றிய அவர், பின்னர் 1971 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சித் துறையில் (ERD) பொருளாதார நிபுணராக இணைந்தார். அதன் பின்னர், அவர் ஓர் ஐரோப்பியப் பேரவைப் புலமைப்பரிசிலைப் பெற்றார் அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து, ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு (1975-1976) முதுகலைப் பட்டம் பெற்றார்.   அவர் 1976 ஆ...
மேலும் வாசிக்க

திரு. புஸ்பானந்த ஏக்கநாயக்க

திரு.புஷ்பானந்த ஏக்கநாயக்க சிங்கள கையெழுத்துப் படிவங்களின் எழுத்துக்களை வடிவமைத்து வருகிறார். அவர் சிறுவயதில் இருந்தே வெவ்வேறு வடிவங்களில் இதனை மேற்கொண்டு வருகிறார். திரு. ஏக்கநாயக்க வடிவமைத்த முதல் சிங்கள எழுத்துரு மாலிதி ஆகும். திரு. ஏக்கநாயக்க, 1998 ஆம் ஆண்டில் 10 எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டார், ஆனால் அவை உரை தட்டச்சு எழுத்துருக்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அப்போது உரை எழுத்துருவுக்கான தேவை காணப்பட்டது. அதன் விளைவாக, திரு. ஏக்கநாயக்க மிகவும் பிரபலமான சிங்கள ஆஸ்கி(ASCII) எழுத்துரு எஃப்.எம் அபயா இனை வடிவமைத்தார். அதன்பிறகு, வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு மாதிரிகளி...
மேலும் வாசிக்க

கலாநிதி கவன் ரட்ணதுங்க

    கலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட...
மேலும் வாசிக்க

திரு. நீல் குணதாச

திரு. நீல் குணதாச களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின் கற்கை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வி நிர்வாகத்தில் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் ஒரு முதுகலை விஞ்ஞானப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். திரு. நீல் குணதாச தற்போது இலங்கையின் கல்வி அமைச்சின் தரவு முகாமைத்துவக் கிளையின் கல்விப் பணிப்பாளராக (SLEAS-I) உள்ளார். கல்விமுறை க...
மேலும் வாசிக்க

பேராசிரியர் லலித் கமகே

பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் (SLIIT) தலைவர் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் இருக்கின்றார். இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். இது தனது வாழ்க்கையை மாற்றியதாக அவர் கூறுகின்றார். லலித் கமகே பட்டம் பெற்ற பிறகு, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.  லலித் கமகே லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் IT துறையில் முதுகலை பட்டம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெக...
மேலும் வாசிக்க

திரு. ரோஹன் மனமுதலி

திரு. ரோஹன் மனமுதலி, சயின்ஸ் லேண்ட் கோர்ப்பரேஷன் (பிறைவேட்) லிமிடெட்டினை, திரு. சம்பத் கோடமுன்னே உடன் இணைந்து, 1994 ஆம் ஆண்டில் நிறுவினார். இது உள்ளூர் மொழிக்கான கணினிச் செயற்பாட்டில் மட்டுமே, தம்மை அர்ப்பணித்த ஒரு நிறுவனமாகும். திரு. மனமுதலி மற்றும் திரு. சம்பத் கோடமுன்னே ஆகியோர் மும்மொழியிலான சொற்செயலி “திபஸ்”இனை உருவாக்குவதில் இணை-மேம்பாட்டாளர்களாக இருந்தனர். இது இலங்கையில் உள்ளூர் மொழிக்கான கணினிச் செயன்முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்திராததால் பலர் கணினிகளைப் பயன்படுத்தத் தயங்கிய காலம் அது. இலங்கையில் மக்கள் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு பெரிய தடை...
மேலும் வாசிக்க

பேராசிரியர் ரோஹன் சமரஜீவா

பேராசிரியர் ரோஹன் சமரஜீவ அவர்கள் 1998-99 காலப்பகுதியில் இலங்கையில் தொலைத்தொடர்புகள் திணைக்களத்தின் பிரதான பணிப்பாளராக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பினார். உரிமம் பெற்ற பின்னர் இரண்டு புதிய நிலையான ஆபரேட்டர்களான சன்டெல் மற்றும் லங்கா பெல் மற்றும் சிறீலங்கா டெலிகாம் ஆகியன தனியார்மயமாக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம், ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் திணைக்களமானது சிறீலங்கா டெலிகாம் (SLT) எனப்படும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது. 1996 இல் இயற்றப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு...
மேலும் வாசிக்க