திரு. சிறீ சமரக்கோடி

திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். இவர் மின்னணுவியல் மீதான ஆர்வத்தை இங்கு தான் முதலில் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கு மொபைல் தொலைபேசி முறையினை கொண்டுவருவதில் முன்னோடியாக இருந்தார். இவர் செல்டெல் லங்கா (Celltel Lanka) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் ஆரம்ப உரிமப் பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஈடுபட்டார். மேலும், லங்கா இன்டர்நெட்டை அமைப்பதிலும் அவர் ஈடுபட்டார், இது இலங்கையில் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net ஐத் தொடங்கியது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

திரு. சிறீ சமரக்கோடி அவர்கட்கு தகவல் தொடர்பாடற் தொழினுட்பத்தின் மீதான ஆர்வம், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்திலேயே தொடங்கியது. இவர் 1972/73 காலப்பகுதியில் அவரது பாடசாலை வானொலிக் கழகம் மற்றும் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். அந்தக் கழகத்தின் உறுப்பினர்கள் உபகரணங்களான ஆம்ப்ளிஃபய்யர்ஸ் மற்றும் ஒரு அமெச்சூர் ரேடியோ போன்றவற்றை அமைத்திருந்தனர். அவர்கள் அமைத்த அனைத்து மின்னணு உபகரணங்களும் தெர்மோனிக் வால்வுகளை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்பட்டது. அப்போது இலங்கையில் டிரான்சிஸ்டர்கள் எங்கும் இருந்திருக்கவில்லை. வானொலிக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றைய மாணவர்களுக்கு மின்னணுவியல் அடிப்படைகள் பற்றிக் கற்பித்தனர். திரு. சிறீ சமரக்கோடி அவர்கள், ஒரு மாணவனாக அவரது பாடசாலைக்கான பொதுவான முகவரி முறைமையினை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார்.

இவர் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர், ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார், அங்கு அவர் மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் பெற்றார். இவர் ஐக்கிய இராச்சியத்தில் IBM ஆய்வுகூடங்களில் சிறிது காலம் பணியாற்றினார். அங்கு, திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் நுண்செயலிகள் (microprocessors) பற்றிய அறிமுகத்தினைப் பெற்றுக் கொண்டார். இது அவருக்கு ஒரு புதுமையான விடயமாக இருந்தது. அவை IBM System/370 போன்ற பெரிய கணினிகளில் தொழிற்பட்டன. அறிவுறுத்தல் தொகுப்பு (instruction set) ஒரு சிறிய அட்டையாக இருந்தது என்றும் ஒவ்வொரு அறிவுறுத்தலும் கையால் திறக்கப்பட வேண்டும் மற்றும் அங்கு முறையான அறிவுறுத்தல் அசெம்பிளர்கள் போன்றவை காணப்படவில்லை எனவும் அவர் நினைவுபடுத்துகிறார். திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் 1980 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார். அவர் டேட்டா ஜெனரல் மற்றும் பிபிசி மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான நிறுவனத்தை மற்றைய முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பெற்றுக் கொண்டார். கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பல பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் முதல் கணினிகளை வழங்கினர். அவ் முதல் கணினியின் பிரதான நினைவகம் 512 K ஆகவும், வன்தட்டின் கொள்ளளவு 10 MB நீக்கக்கூடியதாக மற்றும் 10 MB நிலையானதாகவும் காணப்பட்டது. இது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருந்ததுடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் கணினிகளைப் பயன்படுத்தத் தொடங்கின.

அதே நேரம், திரு. சிறீ சமரக்கோடி அவரது ஒரு பொறியியல் நண்பருடன் சேர்ந்து தொலைக்காட்சி அன்ரனாக்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர், ஆனால் போட்டித்தன்மையின் காரணமாக அதனை அவர்கள் நிறுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் மின்னணு உபகரணங்களைத் தயாரித்தனர். அவர்கள் இதை சிறிது காலம் தொடர்ந்தனர். அத்துடன் 1994 காலப்பகுதியில் அவர்கள் சுமார் 1000 ஊழியர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஹோமாகமவில் ஒரு தொழிற்சாலை இருந்தது. அத்துடன் அவர்கள் இருமுறை ஜனாதிபதி ஏற்றுமதி விருதினையும் பெற்றுக் கொண்டனர்.

மொபைல் தொலைபேசி – செல்டெல் லங்காவை அமைத்தல்

இதற்கிடையில், திரு. சமரக்கோடி செல்லுலார் தொலைபேசியின் (cellular telephony) சாத்தியத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் சிறீலங்கா ரெலிகோம் (SLT) நெட்வொர்க் ஒரு ஏகபோகமானதாக இருந்தது, மேலும் அது பெரிதும் நெரிசலானதாகக் காணப்பட்டது. குறிப்பாக உச்ச நேரங்களில் தொலைபேசி அழைப்பைப் பெறுவது கடினமாக இருந்தது. திரு. சமரக்கோடி கல்கிசையில் வசித்து வந்தார். அத்துடன் சில நேரங்களில், அங்கு ஓர் இயங்கொலி (dial tone) கூட இல்லை என்று அவர் கூறுகிறார். திரு. சமரக்கோடி கைத்தொலைபேசி தொழினுட்பம் பற்றி வாசித்திருந்தார் அத்துடன் செல்லுலார் நெட்வொர்க்கைத் தொடங்க ஆர்வமுள்ள மற்றவர்களையும் அவர் சந்தித்தார். பின்னர் அவர் இலங்கையின் முதல் மொபைல் தொலைபேசி நிறுவனமான செல்டலை (Celltell) மூன்று உள்ளூர் முதலீட்டாளர்களான – திரு. மெனிக்டிவேலா, திரு. ஆர்தர் சேனநாயக்க மற்றும் திரு. அருணா சிரிவர்தேனா – மற்றும் ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் உதவியுடன் 1987 இல் தொடங்கினார். திரு. சமரக்கோடி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவர் தொழில்நுட்ப அம்சங்கள், நெட்வொர்க்கைத் திட்டமிடுதல் மற்றும் ஆரம்ப உரிமம் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகவிருந்தார். அந்தக் காலகட்டத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இல்லை. உரிமம் தொலைத்தொடர்புத் திணைக்களத்தின் மூலம் செய்யப்பட வேண்டியிருந்தது. திரு.கே.கே. குணவர்தன அவர்கள் தொலைதொடர்புகளின் பணிப்பாளராக இருந்தார், அவர் திரு. சமரக்கோடி மற்றும் அவரது குழுவினருக்கு உரிமத்தைப் (இது A4 தாளில் வெளியிடப்பட்டது!) பெறுவதிலும், ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளைத் தீர்ப்பதிலும் பெரிதும் உதவினார். தொலைத்தொடர்புத் திணைக்களத்தினால் செல்டெலுக்கு வழங்கப்பட்ட இந்த ஆரம்ப உரிமம், குரலுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

திரு. சமரக்கோடி மற்றும் குழுவினர் இலங்கையில் முதல் செல்லுலார் நெட்வொர்க்கை நான்கு அடிப்படை நிலையங்களுடன் தொடங்க முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகமாக இருந்தது, அதாவது சுமார் 700 USD ஆகக் காணப்பட்டது. இறக்குமதி வரியுடன் சேர்த்து சுமார் LKR 100,000/- ஆகக் காணப்பட்டது. முதல் ஆண்டில் சுமார் 1000 சந்தாதாரர்கள் இருந்தனர். திடீரென விலைகள் குறையத் தொடங்கின. அத்துடன் மற்றைய செயற்படுத்துநர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். செல்டெல் நெட்வொர்க் அனலாக் ஆக இருந்தது, டயலொக் GSM உடன் அறிமுகமான பின்னர் சந்தையில் மாற்றமேற்பட்டது. அதன்பிறகு, திரு. சமரக்கோடி, செல்டெலின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை இராஜினாமா செய்தார், ஆனால் தொடர்ந்து ஒரு பங்குதாரராக இருந்தார்.

செல்டெல் வைத்திருந்த முதல் தலைமுறை நெட்வொர்க்கால் தரவை எடுத்துச் செல்ல முடியவில்லை. GSM அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, இது சாத்தியமானது, ஆரம்பத்தில் டயலொக் மற்றும் பின்னர் மற்றைய செயற்படுத்துநர்களால் இது நடைமுறையானது. 1980 களில் நடந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு குரல் மற்றும் தரவின் ஒருங்கிணைப்பு ஆகும். இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக மாறியது. 2G மொபைல் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 3G மற்றும் 4G. 3G க்கு இடமில்லை என்பதால், கேரியர்கள் விரைவில் 3G வெளியேற்றப்படும் என்று திரு சமரகோடி நம்புகிறார். அனைவரும் 5G இற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருங்கிணைப்பு முழுமையாக நிகழ்ந்துள்ளது, இப்போது குரல் தரவுகளாக கொண்டு செல்லப்படுகிறது என, அவர் கூறுகிறார்.

லங்கா இன்டர்நெட் (Lanka Internet)

இணையம் இப்போது தொடங்கியது – திரு. சமரக்கோடி மற்றும் அமெரிக்காவில் இருந்த சகாக்களான கலாநிதி பிரபாத் சமரதுங்கே, பேராசிரியர் குலத்திலகே ஆகியோரால் 1990 களின் நடுப்பகுதியில் லங்கா இன்டர்நெட் உருவாக்கப்பட்டது. முதலில், அவர்களிடம் SLT மற்றும் modem bank இலிருந்து 64K இணைப்பு மட்டுமே இருந்தது. மோடம்கள் 2.4k ஆக இருந்தன, பின்னர் அவர்கள் செய்யக்கூடியது மின்னஞ்சல்களை அனுப்புவது மட்டுமே. பின்னர், லங்கா கிளியரில் தற்போது இருக்கும் திரு. சன்னா டி சில்வா போன்ற திறமையானவர்கள் லங்கா இன்டர்நெட்டில் சேர்ந்தனர், மேலும் அவர்கள் இலங்கையில் முதல் வணிக வலைத்தளமான www.lanka.net யைத் தொடங்கினர். இலங்கையில் முதல் இணையத்துடனான செய்தித்தாள்களாக டெயிலி நியூஸ் மற்றும் சன்டே ஒஃப்சேவர் ஆகியவற்றினை லங்கா இன்டர்நெட் உருவாக்கியது. முதல் இணையத்துடனான வானொலி நிலையமான TNL வானொலியையும் லங்கா இன்டர்நெட் தொடங்கியது. அதிக உரிமங்கள் வழங்கப்படும் வரை இது சிறிது காலம் ஏகபோகமாக இருந்தது. திரு. சமரக்கோடி தனது பங்குகளை விற்று மற்றைய முயற்சிகளில் கவனம் செலுத்தினார். அதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை என்று அவர் வருத்தப்படுகிறார், ஆனால் லங்கா இன்டர்நெட் தரவுக்கு மட்டுமே என்று அவர் கூறுகிறார், மற்ற செயற்படுத்துநர்கள் ஒன்றிணைவதால் தரவு மற்றும் குரலை ஒன்றிணைக்கிறார்கள். எனவே லங்கா இன்டர்நெட் வெளியேறியது.

இறுதியாக, திரு. சமரக்கோடி மின்னணுப் பாகங்கள் உற்பத்தி மற்றும் தகவல் தொடர்பாடற் தொழினுட்பம் ஆகிய இரண்டிலும் ஈடுபட்டார் என்று கூறுகிறார். தற்போது, 1980 களில் அவர் முன்னோடியாக இருந்த மின்னணு உற்பத்தித் துறை வளர்ந்துள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்களும் சுதந்திர வர்த்தக வலயங்களில் இயங்குகின்றன. எதிர்காலம், 5G உடன் உள்ளது, இது IOT உடன் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்கள் வரும் என அவர் கூறுகின்றார்.