திரு. மஞ்சு ஹத்தொட்டுவ

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ அவர்கள் தனது பாடசாலை கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியில் பயின்றார். அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானமானி (கௌரவ) பட்டத்தையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் மில்லேனியம் ஐ.டி (MIT) நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி / நிறைவேற்று பணிப்பாளராகவும் ஸ்டொக் எக்ஸ்சேன்ஜ் ​மென்பொருள் நிறுவனத்தின் தொழில்துறை தலைவராகவும்,  பணியாற்றியுள்ளார். MIT யில் பணிபுரியும்போது தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அவர் காட்டிய ஈடுபாடானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) துறையை அபிவிருத்தி செய்வதில் தனது ஆர்வத்தை சுட்டிக்காட்டுவதாக திரு. ஹத்தொடுவ குறிப்பிடுகிறார்.

அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் ( ICTA) தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளர் / தலைமை நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.  ICTA நிறுவனத்தின் செயல்பாடுகள் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 திகதியன்று கொழும்பு 05, கிரிமண்டல மாவத்தை எனும் இடத்தை முகவரியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திட்டம் முதலில் நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, இந்த முயற்சிக்கு ஒன்றிணைக்கப்பட்ட மக்களின் பின்னணிகளை எப்போதும் பரிசீலிப்பது அவசியம் என்று திரு. ஹத்தோட்டுவ அவர்கள் கூறுகிறார். ஆரம்பத்தில் ஒன்றிணைக்கப்பட்ட மக்கள், அதன் தொடக்கத்தில் ICTA இன் தொடக்க கலாச்சாரத்தை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 2002ஆம் ஆண்டில், உலக வங்கி இந்தத் துறையை அபிவிருத்தி செய்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் காட்டியது. அந்த நேரத்தில் இந்தியாவின் மென்பொருள் துறையானது மென்பொருள் சேவைகளில் சந்தையில் தலையோங்கிக் காணப்பட்டது. ஆனால், சிறிய நாடு என்ற வகையில் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் மென்பொருள் சேவைகள் முன்னோக்கிச் செல்லும் வழி அல்ல என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. என்றாலும், மென்பொருள் தயாரிப்பானது இலங்கையானது உலகளவில் பிரகாசிக்க முடியுமான வழிகளில் ஒன்றாக இருக்க முடியும். இவ்வாறாக, உலக வங்கியானது இலங்கையில், அரசாங்க, பொதுத்துறை, தனியார் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டபோது, அந்த கட்டத்திலேயே இ-ஸ்ரீலங்கா பிறந்தது. பூகோள ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் இலங்கை முழுவதையும் உள்ளடக்கிய ஒரு தேசிய வேலைத்திட்டத்திற்கு அரசியல் உள்வாங்குதலுடன் கூடிய ஒரு தொலைநோக்குப் பார்வை முக்கியமானதாக இருந்தமையால் இது போன்ற ஒரு தேசிய வேலைத்திட்டம் தொடங்கப்பட வேண்டியது அவசியமாக அமைந்தது.. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகத்தை அமைப்பதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டம் என்ற நவீன, முன்னோக்கிய சிந்தனைச் சட்டம் ஸ்தாபிக்கப்பட்டமையானது இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கு தேவையான பொருத்தமான ஒழுங்குறுத்தும் மற்றும் கொள்கை கட்டமைப்பை அமைச்சரவைக்கு பரிந்துரைப்பதற்கும் ஐ.சி.டி.ஏ அரசாங்கத்தால் குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்டது. இலங்கை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காகவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை அதன் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்துவதே இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

அரசாங்கம் செயற்பட வேண்டிய விதத்திற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது – ஆரம்ப குழு சிறியதாக இருக்க வேண்டும், அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அமைப்பு, இ-ஸ்ரீலங்கா வரைபடவரைபடம் மற்றும் கோரப்பட்ட ஒட்டுமொத்த விளைவுகளுக்கு மிகவும் பதிலளிக்கும் வகையில் செயல்பட முடியும். பொதுத்துறை, தனியார் துறை, அரசு சாரா பின்னணி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளில் இருந்து பன்முக குழு தேர்ந்தெடுக்கப்பட இருந்தது. ICTA அணியானது “என்றென்றும்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை ஏனெனில், அவர்கள் ஒப்பந்த வேலையில் இருந்ததால் மட்டுமல்லாமல், காலப்போக்கில் ICTA இன் பங்கிற்கு புதிய திறன்கள் தேவைப்படும் என்ற உண்மையின் காரணமாகவும் ஆகும். எனவே, இந்த வளர்ந்து வரும் புதிய பாத்திரங்களுக்காக ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்படலாம் அல்லது புதிய நபர்களை பணியமர்த்த வேண்டும். ICTA தொடர்பு கொள்ள வேண்டிய பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய ஒரு குழுவாக இது இருக்க வேண்டும். மேலே உள்ளவற்றைக் கருத்தில் கொண்டு, திட்டத்தை மிக விரைவாக தொடங்குவதற்கு மேற்கூறியவற்றால் முடியுமாக இருந்தது. வாரிய அமைப்பு இதே போன்ற அமைப்புகளிலிருந்து வேறுபட்டது; ICTA வில் ஒரு நிறைவேற்று தலைவர் அல்லாத தலைவர் மற்றும் நிர்வாக பங்கு தலைமை நிர்வாக அதிகாரி / நிர்வாக பணிப்பாளர் காணப்பட்டது. இது தலைமை நிர்வாக அதிகாரியின் கீழ் ஒரு நிலையான குழுவை அமைக்க உதவியது. சம்பளமானது திறனை அடிப்படையாகக் கொண்டிருந்தது . மற்றும் அமைப்பானது ஆரம்பத்தில் சூரிய அஸ்தமன விதியைக் கொண்டிருந்தது; ஐந்து ஆண்டுகளில் அது செயல்படவில்லை என்றால் அது இல்லாமல் போய்விடும் மற்றும் நீட்டிப்பு கிடைக்காது. இதேபோல், ஊழியர்கள் அவர்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்ற உண்மையை அறிந்திருந்தனர், ஆகவே தலைமை நிர்வாக அதிகாரி உட்பட பணியாளர்கள் அனைவரும் வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் பெறப்பட்ட செயல்திறனுடன் தொடர்பான சம்பள அதிகரிப்புகளையே கொண்டிருந்தார்கள் .

செயல் நடவடிக்கைகளை உருவாக்குதல் :

பிரதான நிதி பெறப்படுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் உலக வங்கியால் ஒரு சிறிய தொகை கிடைக்கப்பெற்றது என்று திரு. மஞ்சு ஹத்தொட்டுவ விளக்குகிறார். எனவே, நிறுவன கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய வெளிப்படையான நவீன கருத்துருக்களை உருவாக்குவதை விட கணினிகள், வாகனங்கள் போன்றவற்றை குத்தகைக்கு பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட தகவல் தொழில்நுட்ப சபையின் முன்னோடியான தகவல் தொழில்நுட்ப சபையால் (சி.என்.டி.இ.சி) மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய பணிகள் ஆராயப்பட்டன. திரு. ஹத்தொட்டுவ, முன்னர் செய்யப்பட்டதை அப்படியே பிரதி செய்யாமல் மேற்கொள்ளப்பட்ட நல்ல வேலைகளை கட்டியெழுப்புவதே முடிவு என்று கூறுகிறார். மறைந்த பேராசிரியர் வி.கே.சமரநாயக்க உட்பட பலர் ஆற்றிய பங்களிப்பை திரு. ஹத்தொட்டுவ ஏற்றுக்கொள்கிறார்.

சின்னம் மற்றும் நிறுவன வடிவமைப்பு:

திரு. ஹத்தொட்டுவ அவர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சின்னத்தை வடிவமைக்கும் போது, பயன்படுத்திய விவரங்களின் அளவையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்; ICTA என்ன செய்ய முயற்சிக்கிறது என்ற சாராம்சத்தை நிறுவனத்தின் இலச்சினையானது படம்பிடித்துக் காட்டுகின்றது. நான்கு ஆரம்ப நிரல் பகுதிகளை சித்தரிக்க நான்கு சதுரங்கள் இருந்தன. (பின்னர், ஆறு நிரல் பகுதிகள் இருந்தன). சின்னம் முழுவதும் புள்ளிகள், ஒரு சாய்வு திட்டம் பகுதிகளின் அதிகரிப்பு மற்றும் வேலை மற்றும் சிதறடிக்கும் பல புள்ளிகள் கூட்ட மூலவளம் மற்றும் கூட்டாண்மையைச் சித்தரிக்கின்றது; இது சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றியதாகும். ICTA ஆனது செயற்படுத்தும் ஒன்று மட்டுமே என்று அவர் விளக்குகிறார். நிறுவனத்தின் உள் வடிவமைப்பு படைப்பாற்றலை சக்தியூட்டவும் தூண்டவும் இருந்தது. திரு. மஞ்சு ஹத்தொட்டுவ மாலம்பேயில் உள்ள மிலேனியம் தகவல் தொழில்நுட்ப வளாகத்தை வடிவமைக்கும் போது வடிவமைப்பது குறித்த இந்த யோசனைகளை ஆராய்ச்சி செய்து சேகரித்துள்ளார். ICTA ஒரு திறந்த வேலைத் தளத்தைக் கொண்டிருந்தது. இது பணியிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்கள் செல்லக்கூடிய வகையில் இருந்தது. அனைத்து திட்டப் பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன, தனித் தனி அறைகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் செயலாக்கத்திற்காக நன்கு உதவியிருக்க மாட்டார்கள் என்று அவர் விளக்குகிறார். இந்த ஆரம்ப கட்டத்தில் நிறுவன வடிவமைப்பை பார்வையிடுவதற்காக மற்ற நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வருவது வழக்கம் ஏனென்றால் இந்த நேரத்தில், ஒரு திறந்த திட்ட அலுவலகம் வழமையான அரசாங்க அலுவலங்களுக்கு மாறானது. பல கூட்ட அறைகளும் இருந்தன. சிறியதாக செயலணியை வைத்திருக்க, பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கல் போன்ற பல செயல்பாடுகள் வெளிப்புற மூலவளங்களால் மேற்கொள்ளப்பட்டன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திட்டம் நடவடிக்கைகளை ஆரம்பித்த உடனேயே, ஆறு வேலைத்திட்டப் பிரதேசங்களுக்காக பங்குதாரர்களைக் கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன என திரு. மஞ்சு ஹத்தொட்டுவ மேலும் விளக்குகிறார். இவை சிறியதான ICTA அணியில் கூட்ட மூலவளக் கருத்துக்களை திரட்டுவதற்கான ஒரு வழியாகும் என்று அவர் விளக்குகிறார். ICTA குழு சிறியதாக இருந்ததால், கூட்டாண்மை தேவைப்பட்டது மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட குழுக்களை அமைப்பதன் மூலம் வெளியிலிருந்து யோசனைகளை சேகரிக்க முடியும். இது ICTA இன் வடிவமைப்பு மற்றும் வரைபடத்தின் ஒரு பகுதியாகும். பேராசிரியர் ஜிஹான் டயஸ் மற்றும் திரு. ரொஷான் தேவபுற போன்ற ஆரம்ப திட்ட பணிப்பாளர்கள் இந்த திட்டத்தில் ஆர்வமாக இருந்ததாகவும், தங்கள் சொந்த சுயாதீனமான யோசனைகளைக் கொண்டிருந்ததாகவும் திரு. ஹத்தோட்டுவா கூறுகிறார். குழு ஒரு இறுக்கமான படிநிலை இல்லாமல் செயல்பட்டது, அதாவது “சேர்” போன்ற பதவி பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படவில்லை. அந்தஸ்தின் இத்தகைய உணர்வுகள் தகவல் தொடர்பாடலுக்கு தடையாக உள்ளன. ICTA இன் “பெரிய கூட்ட அறையில்” வழக்கமான கூட்டங்கள் கூட்டப்பட்டன, அதில் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டது என்று திரு. ஹத்தொட்டுவ நினைவுகூர்கிறார். முடிவுகள் சார்ந்த பணிகளுக்கு முன்னேற்றத்தை கண்காணிப்பது முக்கியமானது. இதுவும் நிறுவன கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அரச துறையிலிருந்து பொருத்தமான நபர்கள் பணியாட்களாக பணியமர்த்தப்பட்டனர், மேலும் வாரியத்திற்கும் பணியமர்த்தப்பட்டனர்; திரு. லலித் வீரதுங்க இ-அரசாங்கப் பகுதியின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளராக சேர்ந்தார். திரு. வசந்த தேசப்பிரிய, நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திலும் அரசுத் துறையில் அனுபவம் பெற்றிருந்தார். திரு. லியோட் பெர்னாண்டோ நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இது அரசாங்கத்தை தானியங்கியாக்குவது மட்டுமல்லாமல், அரசாங்கத்தை மாற்றியமைத்து மீள் பொறியியல் செய்வது தொடர்பிலே ICTA திட்டத்தை மேற்கொண்டது, எனவே, அரசு மற்றும் அரசு செயல்முறைகளின் கலாச்சாரம் குறித்த விரிவான புரிதல் அவசியமாகும்.

” இ “:

திரு. மஞ்சு ஹத்தொட்டுவ, இ-ஸ்ரீலங்காயில் உள்ள “இ” என்பது “இயலுமை” அல்லது “அதிகாரமளித்தல்” என்பதற்கு ஆதரவாக இருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாக மேலும் விளக்குகிறார். ஆனால் “இ” என்பது “ஊக்குவித்தல், ஆற்றல், அதிகாரம் அளித்தல், இயக்குதல், மேம்படுத்துதல், கற்பித்தல்” போன்றவற்றைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார். சுவாரஸ்யமாக, வளர்ச்சி விளைவுகள் சில “இ” வேண்டும். எடுத்துக்காட்டுகள்: ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் சமபங்கு. ஏற்றுமதி; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது ஏற்றுமதி சார்ந்த தொழிலாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. வேலைவாய்ப்பு; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது வேலைகளை உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி என்றும் அறியப்பட்டது. சமபங்கு; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் துருவப்படுத்தலை குறைக்க க்கூடிய ஒரு சிறந்த வழியாகும்.

முன்னோடி திட்டங்கள்:

ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் இருந்தன என்பதை திரு. மஞ்சு ஹத்தொடுவ நினைவு கூர்கிறார். இவை ஒரு பொருத்தமான தகவல் தொடர்பாடல் மூலோபாயத்துடன் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. ஒரு வளர்ச்சித் திட்டத்தில் முடிவுகள் மற்றும் விளைவுகள் நேரம் எடுக்கும். எனவே, பல முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இவை குறுகிய கால முடிவுகளை வழங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம், பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் அரச சாரா சமூகங்களிடமிருந்து விரைவான ஏலங்களை கோரியது மற்றும் அழைப்பு விடுத்தது. உடனடி பிரச்சினைகள் என்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 22 சுவாரஸ்யமான முன்மொழிவுகளை ICTA பெற்றது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் பெறுபேறுகள், குறுகிய காலத்தில் ICTA இற்கு முடிவுகள் இல்லாமல் போகலாம் என்ற விமர்சனங்களை நிவர்த்தி செய்ததுடன், இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி வடிவமைப்பையும் சுட்டிக்காட்டியது. உண்மையில் திருப்திகரமான முன்னோடித் திட்டங்கள் இருந்தன. இந்த திட்டங்கள் பின்வருமாறு இருந்தன;

  • யூனிகோட் இணக்கமான சிங்கள எழுத்துருக்களை அபிவிருத்தி செய்யும் சிங்கள எழுத்துருக்கள்;
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் ஒரு பழைய கருத்தாக்கத்தை எவ்வாறு நவீனப்படுத்த முடியும் என்பதை விளக்குவதாக இ-காசுக் கட்டளை இருந்த்து. அதாவது, மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்களை செய்வதில் நன்கு பழக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு, பல தசாப்தங்களாக  இந்த நாட்டில் நிலவும் பண ஒழுங்குக் கருத்தை தக்கவைத்துக் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தின் செயற்பாட்டை இணைப்பது அவசியமாகும்.
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன்களுடன் பணியிடத்திற்கு அதிகாரம் அளித்தல் – இந்த காலகட்டத்தில் கிராமப்புற சமூகங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நன்மைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. எனவே, விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, மற்றும் பயிற்சியானது குறித்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவசியமானதாக இருந்தன. இந்த முன்னோடித் திட்டம் போன்ற ஆரம்ப கால முன்னோடித் திட்டங்களில் சில இந்த அம்சங்களை உள்ளடக்கியிருந்தன. இவை பின்னர் அமுல்படுத்தப்பட்ட இ-சமூகத் திட்டத்திற்கு தகவல்களை வழங்க உதவின.
  • தேசிய செயற்பாட்டு அறையானது திட்டக் கண்காணிப்புக்கான அனைத்துமே ஒரே இடத்தில் நிறுத்திவைக்கூடிய தளமாக(one-stop dashboard) செயல்பட்டது.
  • தொலைதூர மற்றும் மின் கற்றல்; இது பல்வேறு இலக்கு குழுக்களுக்கு உள்ளடக்கங்கள் மற்றும் பாடநெறிகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் ஐந்து மையங்களை அமைப்பதுடன் சம்பந்தப்பட்டது.
  • உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் (IDP) பதிவேடு: உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களின் பதிவுகளை பராமரிப்பதற்காக அவர்களின் இயக்கங்களைக் கண்காணிக்கும் பொருட்டு இது செயற்ப்பட்டது.
  • விஸ்வ ஞான கேந்திரம்; இந்த முயற்சி இறுதியில் மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட திட்டமாக பரிணமித்தது – நெனசல (அறிவகம்) மையங்கள்.
  • சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (SME) இணைய முகப்பு: சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. இந்த திட்டம், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு வளத் திட்டங்களை உருவாக்கி, உற்பத்தித் திறனில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்கை அவர்களுக்கு உணர்த்தவும், உலகளவில் அவற்றை மேலும் போட்டித்திறன் மிக்கதாக மாற்றவும் இருந்தது.
  • கோவி ஞான அமைப்பு: இது விலைகளில் சீரான தன்மையை உறுதி செய்ய சந்தைகள் முழுவதும் நிகழ் நேர காய்கறி விலைகளை அறியத்தருவதன் மூலம், விலை நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. . தம்புள்ளை மற்றும் மீகொடை வலயங்கள் இரண்டும் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு விற்க விரும்புகிறார்களோ அங்கு தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை வழங்குகின்றன.
  • இ-பாராளுமன்றம்: பாராளுமன்றத்திற்கு டிஜிட்டல் தகவல்களை வழங்குதல் மற்றும் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத்தளத்தை மேம்படுத்துதல்.

முன்னோடித் திட்டங்களுக்கு இது போன்ற பல ஆக்கப்பூர்வமான சமர்ப்பிப்புகள் இருந்தன. இந்த முன்னோடித் திட்டங்கள் மூலம், முக்கிய திட்டங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

தொடர்பாடல்:

எந்தவொரு தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திலும், குறிப்பாக இலங்கைப் பிரஜைகளுக்கு புதிய வேலைத்திட்டத்தில், அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்ட வகையில் அதை விளக்குவது ஒரு முக்கியமான தேவையாக இருந்தது என திரு. ஹத்தொட்டுவ விளக்குகிறார். ICTA இதைச் செய்ய பல ஆக்கப்பூர்வமான வழிகளைக் கொண்டு வந்தது. அனைத்து துறைகளுக்கும் தகவல் தொடர்பாடல் மேற்கொள்ளப்படுவது முக்கியமாகும். ஊடகங்களுக்குத் தொடர்பு கொள்வது அவசியமாக இருந்தது; செய்தி ஊடகத்தில் கவனம் செலுத்திய மூலோபாய தகவல் தொடர்பாடல் என்ற ஒரு திட்டம் இருந்தது. இதன் விளைவாக, விமர்சகர்கள் “உற்சாகத் தலைவர்களாக” மாறினர். சில விமர்சகர்களை நிறுவனத்திற்குள் வேலை செய்வதற்கு பணியமர்த்தப்பட்டனர். இது ஒரு ஆக்கப்பூர்வமான மூலோபாயமாகும். பின்னர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடின உழைப்பு மற்றும் ICTA என்ன சாதிக்க முயற்சிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். எனவே, இது இலங்கையை மாற்ற முயற்சிக்கும் ஒரு வேலைத்திட்டம் என்பதை அவர்களால் மற்றவர்களுக்கு தெரிவிக்க முடிந்தது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது மிகவும் சக்தி வாய்ந்தது, அதன் மையத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தது, ஆனால் மக்களுக்குப் புரியாத பல பரிமாணங்கள் இருந்தன. எனவே மூலோபாய தகவல் தொடர்பாடல் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மொழி மற்றும் அவர்கள் புரிந்து கொண்ட தொனியில் பல்வேறு பங்குதாரர்களை இலக்காகக் கொள்வது முக்கியம். உதாரணமாக பல்வேறு கிராமங்களில், பேருந்து தரிப்பிடங்கள் அல்லது ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட தெரு நாடகங்களைக் குறிப்பிடலாம். நடிகர்கள் பணியமர்த்தப்பட்டனர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் விவரிக்க பயன்படுத்தப்பட்டனர்.

முக்கிய நிரல்:

இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கிக் குழு, கொரியா எக்ஸோம் வங்கி, ஸ்வீடன் மற்றும் ஜப்பான் உட்பட ஏராளமான நன்கொடையாளர்கள் ஆதரவளித்தனர். மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறனைக் கொண்ட ஒரு திட்டமாக இதை அவர்கள் அடையாளம் கண்டதால் அவர்கள் இத்திட்டதை ஆதரித்தனர்.

இந்த ஆறு திட்டங்களும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் அதன் அதிகபட்ச திறனை அடைய நிரப்ப வேண்டிய இடைவெளியை நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்டன. தொடுப்புடைமை அத்தகைய அம்சங்களில் ஒன்றாகும். 2002/2003 இல் நாட்டின் தொடுப்புடைமையானது 2020 ஆம் ஆண்டில் இருப்பது போல் இல்லை. நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை இணைய வசதிகூட இருக்கவில்லை. எனவே, கிராமங்களில் உள்ள சாத்தியமான பயனர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் வழிகளைக் கண்டறிவது அவசியமானதாக இருந்தது.

சந்தை சக்திகள் இலாபகரமானவை என்று கருதாத இடங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கு தொலைத்தொடர்பு இயக்குனர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டிய தொலைத்தொடர்பு திட்டம் ஒரு யோசனையாக இருந்தது. இந்த கிராமங்களுக்கு அரசு ஆதரவு இல்லாமல் தொலைத்தொடர்பு இயக்குனர்கள் உடனடியாக இணைப்பு அளித்ததால், இந்த மானியம் ஒருபோதும் வழங்க வேண்டியதில்லை என்பதை திரு. ஹத்தோட்டுவா நினைவுகூர்கிறார். இது வெற்றிகரமான விளைவாகும்.

அதன் பின்னர், கிராமங்களில் உள்ள மக்களுக்கு கணினிகள் அல்லது இணையம் மூலம் இயங்கும் தொலைபேசிகள் கிடைக்காததால் ICTA நெனசல (அறிவகம்) திட்டத்தை கொண்டு வந்தது. நெனசல மையங்கள் இ-கியோஸ்க்குகளைப் போலவே இருந்தன. அவை தனியார் இயக்குனர்களால் நடத்தப்பட்டன, அல்லது ஒரு தனியார் இயக்குனரைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்த சந்தர்ப்பங்களில், பொதுத்துறை இவற்றை ஆதரித்தது. இவற்றிற்கு மானிய விலையில் இணைய இணைப்பு வழங்கப்பட்டன, பயிற்சி வழங்கப்பட்டது, மற்றும் அரச தகவல் மற்றும் சேவைகளை அணுகக்கூடியதாக இருந்தன. இது ஒரு சக்திவாய்ந்த திட்டமாகும்; இது பரவலாக அறியப்பட்டது மற்றும் இது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு எடுத்துச் சென்ற இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இதற்கு இணையாக மக்களின் திறன்களையும் ஆற்றல்களையும் உருவாக்குவது அவசியமாக இருந்தது; கிராமப்புற கிராமங்களில், அரசாங்கத்தில், அரசியல் தலைமைகளில், அல்லது பாடசாலைகளில். இந்த நோக்கத்தை அடைவதற்காக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மனிதவள திறன் மேம்பாட்டு திட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஒரு விரிவான சிஐஓ (பிரதான புத்தாக்க அதிகாரி) திட்டத்தை நடத்தியது. இது அரசுத் துறைகள் சி.ஐ.ஓ.க்கள் மூலம் தங்கள் சொந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திட்டங்களை நிர்வாகிப்பதற்கு ஏதுவாக இருந்தது. இந்த நிரலுக்கு பல பரிமாணங்கள் இருந்தன; பயிற்சி பரிமாணமும் தலைமைப் பரிமாணமும் இருந்தன.

இ-சட்டங்கள் – சட்ட அமுலாக்கம்; சட்டமியற்றுவது போன்ற பல விஷயங்கள் தொழில்துறை போட்டித்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். ICTA அதன் இ-சட்டங்கள் திட்டத்தின் மூலம் இந்த தேவையை பூர்த்தி செய்தது. இந்த முயற்சியின் கீழ், ICTA முதலில் CINTEC ஆல் மேற்கொண்ட பணிகளை முன்னெடுத்துச் சென்றதுடன் அமைச்சரவையானது இது தொடர்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு குறிப்பிட்ட ஆணையை வழங்கியது.

  • 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனில் கொடுக்கல் வாங்கல் சட்டம், இ-வணிகம் (1996) மீதான சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் (UNCITRAL) மாதிரிச் சட்டம் மற்றும் மின் கையொப்பம் மீதான மாதிரிச் சட்டம் (2001) மீதான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்ட தரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டம் மூலம் கணினிக் குற்றங்களை அடையாளம் காண்பதற்கும் அத்தகைய குற்றங்களை விசாரணை செய்வதற்கும் அமுல்படுத்துவதற்கும் நடைமுறைகளை வழங்குவதற்கும் வகை செய்யும். இந்த மசோதாவானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 2005 இல் விவாதிக்கப்பட்டது, அதன் பின்னர் மே 2007 இல் சட்டமாக இயற்றப்பட்டது.

இ-அரசு திட்டத்தின் நோக்கம் அரசாங்கத்தை தானியங்கியாக்குவது மட்டுமல்ல. அரசு செயல்முறைகளை மீண்டும் பொறியமைக்கும் மற்றும் எளிமைப்படுத்தும் நோக்கமும் இருந்தது. பல மும்மொழி வலைத்தளங்கள் அரச தகவல்களை மக்கள் அணுகுவதற்காக அரசுக்கு ஒரு இணைய இருப்பை உருவாக்கின. ஒரு அரசாங்க தகவல் மையம் (ஜிஐசி) உருவாக்கப்பட்டது, இதன் மூலம் மக்கள் பல வழிகளில், குறிப்பாக 1919 ஐ அழைப்பதன் மூலம் புதுப்பித்த தகவல்களை துல்லியமாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஒவ்வொரு திணைக்களத்தின் தகவல்களையும் பெறுவதற்கும் அதை புதுப்பிக்குவதற்கும் ஒரு பொறிமுறை அமைக்கப்பட்டது.

இ-சமூக திட்டத்தை ICTA பெரிதும் பாராட்டுவதாக திரு. ஹத்தொட்டுவ கூறுகிறார். டிஜிட்டல் பிளவை குறைப்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்குலாபங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது கிராமப்புற அளவில் புதுமையை ஊக்குவிப்பதற்கும், வசதியற்ற மற்றும் பின்தங்கிய அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டது. இ-சமூக திட்டம் சர்வதேச அரச சாரா அமைப்புக்கள் (INGO), அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதுடன், பல வெற்றிகரமான புத்தாக்கங்களும் விளைவாக கிடைத்தன.

மற்றொரு முக்கியமான வேலைத்திட்டம் தனியார் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகும். இது வேலை உருவாக்கம், ஏற்றுமதி, தொழில் முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், குறிப்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தியது. இந்த திட்டம் தனியார் துறையில் தலைமை வளர்ச்சிக்கான பல்வேறு வாய்ப்புகளை ஆதரித்தது, இதனால் அவர்கள் அடுத்து எந்த தொழில்நுட்பத்தை அணுக வேண்டும், திறமைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும், வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சிஎம்எம் (திறன் முதிர்ச்சி மாதிரி) போன்ற முதிர்ச்சி மாதிரிகளை எவ்வாறு உருவாக்குவது, உள்ளூர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வணிகத்தை வழங்கக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பிபிஓக்கள் (BPO) பணியமர்த்தக்கூடிய அல்லது வணிகத்தைப் பெறக்கூடிய ஊழியர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவர்கள் உறுதிப்படுத்த முடியும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் செயலாக்கப் பணிகள் இவை அனைத்திற்கும் பங்களிப்பு செய்தன. சுவாரஸ்யமாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மறு பொறியியல் அரசாங்க திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இ-சேவைகள் உள்ளூர் தனியார் துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்க திட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திட்டங்கள் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SME) அவற்றை ஏலத்தில் எடுத்து அவற்றின் முதல் குறிப்பு தளமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளாக இருந்தன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திட்டத்தின் இ-அரசாங்க வேலைத்திட்டமும் இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமும் தனியார் துறையின் நம்பிக்கைத் திறன், மற்றும் குறிப்புத் தளங்களை வளர்ப்பதற்கான வினையூக்கிகளாக இருந்தன.

சிங்களத்திலும் தமிழ் மொழியிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ICTA இன்உள்ளூர் மொழிகள் முன்னெடுப்பு ஒரு முக்கிய வேலைத்திட்டம் என திரு. ஹத்தொட்டுவ குறிப்பிடுகிறார். இலங்கையில் பெரும்பாலான மக்கள் ஆங்கிலத்தில் உரையாடாத காரணத்தால், குறிப்பாக இலங்கையில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது பொருத்தமானதாக மாறுவதற்கு இது அவசியமாக இருந்தது. இந்தப் பணிக்கு, CINTEC முன்னோடியாக இருந்தது, ஆனால் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை அதை ஒரு திருப்திகரமான முடிவுக்குக் கொண்டு சென்றது, இதன் விளைவாக மக்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் தகவல் தொடர்பாடல்த் திறனைப் பயன்படுத்த முடிந்தது, உள்ளூர் மொழி உள்ளடக்கம் பரவலாகவும், இலங்கையர்களுக்கு அணுகக்கூடியதாகவும் இருந்தது.

ஆறு ஆரம்ப வேலைத்திட்டங்களும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சுற்றாடல் முறைமையில் உள்ள பலவீனமான தொடர்புகளை நிவர்த்தி செய்ததாக திரு. ஹத்தொட்டுவ கூறுகிறார். “ஒரு சங்கிலி அதன் பலவீனமான இணைப்பைப் போலவே வழுவிழக்கின்றது” என்று அவர் கூறுகிறார், இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்று பின்தங்கியிருந்தால், அது முழு திட்டத்திலும் ஒரு பலவீனமான இணைப்பாக இருந்திருக்கும். எனவே, இவை அனைத்தும் ICTA தலைமையால் சம கவனம் செலுத்தப்பட்டு முன்னோக்கித் “தள்ளப்பட்டன.” எந்தவொரு முன்னோடித் திட்டத்தையும் போலவே, வழியில் பல தடைகளும் சிரமங்களும் எதிர்ப்பட்டன, ஆனால் ICTA இற்குள் எப்போதும் “செய்ய முடியும்” என்ற அணுகுமுறை இருந்தது என்று அவர் நினைவு கூர்கிறார். அந்த கலாச்சாரம், தொடக்கத்திலிருந்து மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு ஒரு காரணம் என்று அவர் மேலும் விளக்குகிறார்.

அடுத்த கட்டம்: 

இறுதியாக, ICTA அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு பரிணமிக்கும் என்பது குறித்து திரு. மஞ்சு ஹத்தொட்டுவ ஒரு சில இறுதி கருத்துக்களை வெளியிட்டார். ICTA, அதன் தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்ட வழியில், அது தொடர்ந்து பரிணமிப்பது அவசியம் என்ற உண்மையை அங்கீகரித்தது; பணிப்பாணை வளர்ச்சியடைய வேண்டும், பணியாளர்கள் பரிணமிக்க வேண்டும், எனவே நடவடிக்கைகள் பரிணமிக்க வேண்டும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் சேவை செய்ய தெரிவு செய்துள்ள மற்றும் அதன் பிரச்சினைகளை தீர்க்க தெரிவு செய்துள்ள பயனாளிகளுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். மேலும் தனியார் துறை நிறுவனங்களில் எந்த அளவிற்கு இது செயற்படுகிறதோ ​அந்த அளவிற்கு பொதுத் துறையில் இதைச் செற்படுத்துவது பல ஆண்டுகளாக சவாலாகவே இருந்து வருகிறது என்பதே மஞ்சுவின் நிலைப்பாடாக உள்ளது.

தனியார் துறை இப்போது என்ன எதிர்பார்க்கிறது, அரசுத் துறை என்ன தேடுகிறது, ICTA இலிருந்து குடிமக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் ஒன்றுசேர வேண்டும், என்றும் இது நிறுவனத்தின் பணிப்பாணை வழிகாட்டியாக அமையும் என்றும் கூறுகிறார். கீழ்க்காணும் காரணங்களுக்காக, ICTA இ-ஸ்ரீலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தொடங்கிய அதே அளவு ஆர்வத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும் என மஞ்சு கூறி முடிக்கிறார், ஏனெனில்;

“என்னைப் பற்றி பேசுகையில், 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், நான் அதே உணர்ச்சியுடன், அதே உற்சாகத்துடன், அதே நம்பிக்கையுடன் உள்ளேன். மேலும், நான் எனது குழுவிற்கு கூறுவது யாதெனில், நித்திய குணப்படுத்த முடியாத நம்பிக்கையானது அற்புதமான விடயங்களைச் செய்யும் போது அவற்றை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பதாகும். இவ்விடயங்கள் எங்கள் பேரக்குழந்தைகளுக்கு சொல்ல ஒரு சிறந்த கதையாக அமையும். வாழ்த்துக்கள்! “