Author: ichitsty2

திரு.சந்தன வீரசிங்க

திரு. சந்தன வீரசிங்க அவர்கள் DMS எலக்ரோனிக்ஸ் (பிறைவெற்) லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் நாலந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சந்தன அவர்கள் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, கணினித் தொகுதிகளின் மீதான தனது முதல் ஆர்வத்தினை வெளிக்காட்டினார். அதிலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவில் முதல்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றார். இவர் பட்டப்படிப்பின் பின்னர் தரவு நிர்வாக அமைப்புகள் (DMS) நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக 1984 இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய...
மேலும் வாசிக்க

தினீசா எதிரிவீர அம்மணியார்

தினீசா எதிரிவீர அம்மணியார் அவர்கள் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். இவர் இலங்கை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவில் B.Sc. மற்றும் M.Sc பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஒரு கூட்டு உறுப்பினராக இருக்கின்றார் அத்துடன் இலங்கை கம்பியூட்டர் சொசைற்றியின் (CSSL) ஒரு கூட்டு உறுப்பினராகவும் இருக்கின்றார். எதிரிவீர அம்மணியார் ANCL இல் பணியாற்றும் போது, ANCL இற்காக வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மற்றும் டிஜிட்டல் விளம்பர முறைமைக்கான...
மேலும் வாசிக்க

திரு.எஸ்.ரி. நந்தசாரா

திரு.எஸ்.ரி.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார் அத்துடன் UCSC இல் உயர் டிஜிட்டல் மீடியா தொழினுட்ப மையத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார். திரு.நந்தசாரா கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு, ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் மூன்று வருட பட்டப்பின் பயிற்சி பெற்றார். மேலும் இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழினுட்ப ஒத்துழைப்பு திட்டங்களின் கீழ் “புள்ளிவிபரவியல், கணினி பிரயோகங்கள் மற்றும் கணி...
மேலும் வாசிக்க

திரு. ஹர்ஷா விஜயவர்தன

திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக இருக்கின்றார் அத்துடன் இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் (IoT) இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அத்துடன் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் UCSC இன் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவின் (SDU) உருவாக்கத்திலும் ஈடுபாடு காட்டினார். அவர் மற்றும் அவரது குழுவினர் SDU இல் இலங்கை அரசாங்கத்திற்கான மென...
மேலும் வாசிக்க

கலாநிதி ருவான் வீரசிங்க

கலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினை இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். இவர் அரசதுறை நிறுவனங்களுக்காக சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் செயலாக்க ஆய்வுகளை ஆரம்பித்தார். இலங்கைக்கு இணையத்தினை அறிமுகப்படுத்துவதில் உந்துசக்தியாகச் செயற்பட்டு முன்னோடியாக இருந்தவர்களில் கலாநிதி ருவன...
மேலும் வாசிக்க

திரு.லால் டயஸ்

திரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார். திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார்...
மேலும் வாசிக்க

திரு. சன்னா டி சில்வா

திரு. சன்னா டி சில்வா அவர்கள் லங்காகிளியர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் / CEO ஆக இருக்கின்றார். இவர் இலங்கையில் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் நியூயார்க் இல் உள்ள பஃபலோ மாநில பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவில் விஞ்ஞான இளமானிப் பட்டம் மற்றும் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். மேலும் இவர் இலங்கை, சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவிலிருந்த போது, இலங்கையில் இணைய நிறுவனமொன்றினை ஆரம்பிக்க உத்தேசித்திருந்த கலாநிதி பிரபாத் சமரதுங்க அவர்களை சந்தித்தார். இவர் 1995 ஆம்...
மேலும் வாசிக்க

பேராசிரியர் கிஹான் டயஸ்

பேராசிரியர் கிஹான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார். பேராசிரியர் கிஹான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்க...
மேலும் வாசிக்க

பேராசிரியர் அபய இந்துருவ

பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “...
மேலும் வாசிக்க

திரு.யாஸா ருணாரெத்ன

திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Honors) பட்டத்தினைப் பெற்றார் அத்துடன் அங்கு பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளில் இரு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கையில் முதன் முதலில் கணினி நிறுவப்பட்ட அரச சேவை நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார், அத்துடன் அங்குதான் அவர் கணினி செய்முறையில் தனது தொழிலை தொடங்கினார். திரு.கருணாரெத்ன அவர்கள் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் 1970 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டுத் திட்...
மேலும் வாசிக்க