திரு. நீல் குணதாச களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின் கற்கை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வி நிர்வாகத்தில் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் ஒரு முதுகலை விஞ்ஞானப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
திரு. நீல் குணதாச தற்போது இலங்கையின் கல்வி அமைச்சின் தரவு முகாமைத்துவக் கிளையின் கல்விப் பணிப்பாளராக (SLEAS-I) உள்ளார். கல்விமுறை க...
மேலும் வாசிக்க
Author: ichitsty2
பேராசிரியர் லலித் கமகே
பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் (SLIIT) தலைவர் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் இருக்கின்றார். இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். இது தனது வாழ்க்கையை மாற்றியதாக அவர் கூறுகின்றார். லலித் கமகே பட்டம் பெற்ற பிறகு, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
லலித் கமகே லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் IT துறையில் முதுகலை பட்டம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெக...
மேலும் வாசிக்க
திரு. ரோஹன் மனமுதலி
திரு. ரோஹன் மனமுதலி, சயின்ஸ் லேண்ட் கோர்ப்பரேஷன் (பிறைவேட்) லிமிடெட்டினை, திரு. சம்பத் கோடமுன்னே உடன் இணைந்து, 1994 ஆம் ஆண்டில் நிறுவினார். இது உள்ளூர் மொழிக்கான கணினிச் செயற்பாட்டில் மட்டுமே, தம்மை அர்ப்பணித்த ஒரு நிறுவனமாகும். திரு. மனமுதலி மற்றும் திரு. சம்பத் கோடமுன்னே ஆகியோர் மும்மொழியிலான சொற்செயலி “திபஸ்”இனை உருவாக்குவதில் இணை-மேம்பாட்டாளர்களாக இருந்தனர். இது இலங்கையில் உள்ளூர் மொழிக்கான கணினிச் செயன்முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்திராததால் பலர் கணினிகளைப் பயன்படுத்தத் தயங்கிய காலம் அது. இலங்கையில் மக்கள் கணினிகளைப் பயன்படுத்துவதற்கு மொழி ஒரு பெரிய தடை...
மேலும் வாசிக்க
பேராசிரியர் ரோஹன் சமரஜீவா
பேராசிரியர் ரோஹன் சமரஜீவ அவர்கள் 1998-99 காலப்பகுதியில் இலங்கையில் தொலைத்தொடர்புகள் திணைக்களத்தின் பிரதான பணிப்பாளராக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பினார். உரிமம் பெற்ற பின்னர் இரண்டு புதிய நிலையான ஆபரேட்டர்களான சன்டெல் மற்றும் லங்கா பெல் மற்றும் சிறீலங்கா டெலிகாம் ஆகியன தனியார்மயமாக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம், ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் திணைக்களமானது சிறீலங்கா டெலிகாம் (SLT) எனப்படும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது. 1996 இல் இயற்றப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு...
மேலும் வாசிக்க
திரு. நிரஞ்சன் டி சில்வா
திரு. நிரஞ்சன் டி சில்வா அவர்கள் மெற்றோபொலிட்டன் கணினிகள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். திரு. நிரஞ்சன் டி சில்வா தனது முதல் பட்டப்படிப்பினை மின்னணுப் பொறியியல் துறையில் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுகலை முகாமை நிறுவனத்திலிருந்து (PIM) ஒரு MBA பட்டத்தினைப் பெற்றார். நிரஞ்சன் மெற்றோபொலிட்டன் குழுவில் 1981 ஆம் ஆண்டு ஒரு பொறியியலாளராக இணைந்தார்.
நிரஞ்சன் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, வங்கி உபகரணங்களில் ஏகபோக விநியோகஸ்தராக மெட்ரோபொலிட்டன் காணப்பட்டது. உதாரணமாக லெட்ஜர் அட்டைகள் மற்றும் அச்சுப்பொறிகள் ஆகியவற்றைக் கூறல...
மேலும் வாசிக்க
திரு. சிறீ சமரக்கோடி
திரு. சிறீ சமரக்கோடி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். இவர் மின்னணுவியல் மீதான ஆர்வத்தை இங்கு தான் முதலில் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கு மொபைல் தொலைபேசி முறையினை கொண்டுவருவதில் முன்னோடியாக இருந்தார். இவர் செல்டெல் லங்கா (Celltel Lanka) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் ஆரம்ப உரிமப் பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஈடுபட்டார். மேலும், லங்கா இன்டர்நெட்டை அமைப்பதிலும் அவர் ஈடுபட்டார், இது...
மேலும் வாசிக்க
திரு.பாலச்சந்திரன் ஞானசேகரையர்
திரு. பாலச்சந்திரன் ஞானசேகரையர் ICT அரங்கில், உள்ளூர் மொழிகளில் முக்கிய மேம்பாடுகளைப் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடற் தொழினுட்ப நிறுவனத்தின் (ICTA) ஓர் ஆலோசகராக, 2006 ஆம் ஆண்டில் தரநிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு தமிழ் விசைப்பலகைத் தளவமைப்பில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் தமிழ் ICT தரநிலையின் வரைவினை உருவாக்குவதில் பணியாற்றினார். அது தமிழ் விசைப்பலகை தளவமைப்பில் ’கீயிங்-இன்’ தொடர்வரிசைகளை உள்ளடக்கியதுடன், யுனிகோட் தரத்துடன் இணைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கான குறியாக்கம் மற்றும் தமிழிற்கான ஓர் அடுக்கு வரிசை ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இலங்கை தரநிர்ணய நிறுவனத்த...
மேலும் வாசிக்க
திரு. எஸ். சண்முகராஜா (ஷான்)
திரு. எஸ். சண்முகராஜா (ஷான்) மென்பொருள் துறையில் கடந்த 19 ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மற்றும் ஓர் அனுபவமிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணராக இருக்கின்றார். அவர் மொபைல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர், அதில் அவர் கடந்த பத்து வருடங்களாக கவனம் செலுத்தியுள்ளார். அண்ட்ராய்டு, iOS, .NET, ஜாவா மற்றும் மிடில்வேர் ஆகியவற்றில் திறன்களைக் கொண்ட தொலைத் தொடர்பு மென்பொருள் மேம்பாட்டில் அவர் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இவர் இந்தியாவின் திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் இளமானிப் பொறியியல் பட்டம் பெற்றவர். அவர் தற்போது எம்.பிரைன் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலை...
மேலும் வாசிக்க
திரு. ஜானக்க டி சில்வா
திரு. ஜானக்க டி சில்வா சிலோன் பல்கலைக்கழகத்தின் பேராதெனிய வளாகத்தில் பௌதீகவியல் மற்றும் கணிதத்துறையில் 1966 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். இவர் சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு MBA பட்டம் பெற்றுள்ளார். மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CA Sri Lanka), மேலாண்மைக் கணக்காளர்கள் பட்டய நிறுவனம் மற்றும் இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கிறார். திரு. ஜானக்க டி சில்வாவின் கணினிச் செயன்முறையுடனான சங்கம், இலங்கை வங்கியின் செயற்பாடுகளை கணினிமயமாக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டபோது 1978 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் திரு. ஜானக்க டி சில்வா சம்பத் வங்கியில் ஸ்தாபக பொது ...
மேலும் வாசிக்க
திரு.லால் சந்திரநாத்
திரு. லால் சந்திரநாத் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் DMS சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் இன் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இன் ஸ்தாபகக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், ஜூன் 2017 வரை அதன் பணிப்பாளராகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டில் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஸ்தாபகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அங்கு அவர் ஜூன் 2017 வரை பணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டில், DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளராக திரு. சந்திரநாத் நியமிக்கப்பட்டார், மேலும் Oracle கோர்...
மேலும் வாசிக்க